கனடா செய்திகள்
அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழப்பு
09/21/2018அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் , பெண் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 3பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 3 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட குறித்த பெண், பின்னர் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்று அந்த மாநிலக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று வியாழக்கிழமை காலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் 26 வயதானவர் என இனங்காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது