கனடா செய்திகள்
ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் 13 வீரர்கள் உயிரிழப்பு
11/05/2018ஆப்கானிஸ்தானின் கஜ்னி மாகாணத்தில் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் மரணம் அடைந்தனர்.
சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து அந்த பகுதிகளில் தாக்குதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தானின் கஜ்னி மாகாணத்தில் உள்ள சோதனை சாவடிகள் மீது தலிபான்கள் ஒருங்கிணைந்து இன்று தாக்குதல்களை நடத்தினர். தாலிபன்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.