கனடா செய்திகள்
40 குழந்தைகள் உள்பட 51 பேர் கொல்லப்பட்டதுக்கு காலங் கடந்து வருந்தும் சவூதி
09/02/2018சடா நகரில் கடந்த மாதம் பிரபல சந்தைப்பகுதியில் பேருந்து ஒன்றில் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 51 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு இன்று வருந்தவதாக சவூதி கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் கடந்த மாதம் சவூதியின் ஜிசான் நகரின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் மேற்கொண்டமைக்கு பதிலடியாக கூட்டுப்படைகள் சடா நகரின் பிரபல சந்தைப்பகுதியில் பேருந்து ஒன்றின் மீது மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 40 குழந்தைகள் உட்;பட 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 குழந்தைகள் உட்பட 79 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த மனிதாபிமனற்ற தாக்குதல் தொடர்பாக நியாயமான சர்வதேச விசாரணைக்கு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய சவூதி தலைமையிலான கூட்டுப் படையை சேர்ந்த உயரதிகாரிகள் தங்கள் பக்கம் தவறுகள் உள்ளதாக தெரிவித்து இன்று வருத்தம் தெரிவித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.