கனடா செய்திகள்
கனடா வீதி விபத்தில் பலியான டுபாய் இந்திய சங்கத்தின் தலைவர்
10/31/2019கடந்த பல வருடங்களாக ஐக்கியஅரபு அமீரகத்தில் வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர்தனது குடும்பத்தினருடன் கனடாவிற்கு குடிபெயர்ந்த நிலையில் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
நடைபயிற்சிக்காககனடாவின் மிஸ்ஸிசாவுகா பகுதிக்கு சென்ற 73 வயதான ஜஸ்ஜித்சிங் ஜாஜ் என்பவரேஇந்த விபத்தில் உயிரிழந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உயிரிழப்பு டுபாய் வாழ் இந்தியர்கள்உட்பட ஏராளமானோரின் துயரில் ஆழ்த்தியுள்ளதாக டுபாய்இந்திய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆறு வழிச் சாலையை கடக்கும்போது பாரவூர்தியொன்று அவர் மீது மோதியுள்ளது.
படுகாயமடைந்தஜாஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டுபாயிலுள்ளஇந்திய சங்கத்தின் தலைவராக பதவி வகித்துவந்த ஜாஜ் பெரிய தரங்களைகொண்டிருந்த போதும், இந்தியர்களுகாக பல்வேறுநற்பணிகளை ஆற்றி வந்ததாக அவரதுநண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை அவர்நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பாதையை கடப்பதற்காகபாதுகாப்பான பாதசாரிகள் கடவையை பயன்பாடுத்தாமையே விபத்துக்குகாரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.